Saturday, October 29, 2011

தினம் ஒரு சிந்தனை 1

மக்களும் குற்றவாளிகள்தாம்

இந்த உலகத்தில் யார் நல்லவர்கள்?  யார் கெட்டவர்கள் என்று வித்தியாசம் தெரியாமல் போய்விட்டது.  

அரசியல்வாதிகளையும், அரசு அலுவலர்கள், அதிகாரிகளையும் குற்றம் சொல்லிக் கொண்டிருந்த மக்கள் தாங்களும் தவறுகள் புரிகிறோம் என்பதை எப்போதாவது ஒத்துக் கொண்டிருக்கிறார்களா?

பணத்திற்காக சுயமரியாதையை இழக்கத் துணியும் நிலையில்தான் இப்போது பொதுமக்களில் பலர் இருக்கிறார்கள்.


என்னுரை


எல்லாவற்றிற்கும் அளவுகோல் வைத்திருக்கிறோம்.  படிக்க, உழைக்க, பயணிக்க, உண்ண, உடுத்த என எல்லாவற்றிற்கும் அளவு கோல் வைத்திருக்கும் நாம் நமது ஆசைக்கு அளவுகோல் வைத்திருக்கிறோமா?  புதுவீடு கட்டியவனைப் பார்க்கும்போது நமக்கும் வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது.
மற்றவர்கள் காரில் போகிறார்கள். கடனை வாங்கியாவது  காரில் செல்ல வேண்டும் என்ற ஆசை உருவாகிறது.    
உயர வேண்டும் என்கிற ஆசை நல்லதுதான்.   எப்போதும் உயர்வான சிந்தனைதான் மனிதனை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்.
இந்த நூலின் தலைப்பு வானமே எல்லை என்பதும் உங்களின் கட்டுப்படாத கனவுகளுக்குத் துணையாக வரக்கூடியது.
பண்பாடு, ஒழுக்கம் போன்றவற்றைத் தவிர மற்ற நல்ல பண்புகளுக்கு கட்டுப்பாடு தேவையில்லை. அளவுகோல் தேவையில்லை!
மனித உயர்வைத் தடுக்கும் எவற்றையும் தகர்த்துவிட்டு வெளிவர நல்ல அனுபவங்கள் இந்நூலில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன.
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று கணியன் பூங்குன்றனார் கூறுவது போல் நம் மக்களையே  மனதளவில் நாடு, மாநிலம், ஊர், மதம், சாதி, மொழி என இனம் பிரித்து அவர்களை வேற்றுமைப்படுத்தும் பார்வை தேவையில்லை.  எல்லோரும் ஒரே தாய் மக்கள் என்ற நினைப்புதான் நம்மை நல்வழியில் அழைத்துச் செல்லும்.
அனைவரும் சமம் என்ற நினைப்புதான் வேண்டும்.  படித்தவர், படிக்காதவர் என்ற கண்ணோட்டம் தேவையில்லை.  அப்படி ஓர் எல்லைக்குள் அகப்பட்டுவிட்டால் நாமும் சராசரி மனிதனாகவே வாழ்ந்துவிட்டுப் போக வேண்டியதுதான்.
புகழ் பெற வேண்டும்;  வெற்றி பெற வேண்டும்;  உயர வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனை உள்ளவர்களுக்குத்தான்  இந்த நூல் கரம் கொடுத்து வழி நடத்தும்.
விஞ்ஞானத்தின் அதிவேக வளர்ச்சியால் உலகம் சிறு விரல்களுக்கிடையே அகப்படும் அளவிற்கு சுருங்கிப் போய்விட்டது நாம் செய்த புண்ணியம்.  அதன் துணையுடன் எல்லா மொழியையும் (தமிழுடன்) கற்றுத் தேர்ந்து, எல்லோரையும் நண்பர்களாகக் கருதி, எந்நேரமும் உழைக்கத் தயாராகுங்கள் என்ற விருப்பத்துடன் இந்நூலின் உள்ளே செல்ல அழைக்கிறேன்.  வாருங்கள்.

Monday, January 04, 2010

வான்மதி மாத இதழ் சந்தா சேகரிப்பு மற்றும் புத்தக கண்காட்சி

108 ஆம்புலன்ஸின் சிறப்பான சேவையைக்காக ஆம்புலன்ஸில் பணிபுரிந்த செவிலியருக்குப் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு. பெரியகருப்பன் அவர்கள் மற்றும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் திரு. மகேசன் காசிராஜன் அவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.


வான்மதி மாத இதழ் சந்தா சேகரிப்பு மற்றும் புத்தக கண்காட்சி பாரத ஸ்டேட் வங்கி அருகில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வான்மதி பதிப்பக ஆசிரியர் ம.முத்துக்குமரன், புலவர் பதிப்பகம் உரிமையாளர் தேவரம்பூர் மாணிக்கம், காமா பதிப்பாளர் திரு. ஹபிபுல்லா ஆகியோரது நூல்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன. பொதுமக்கள் நூல்களைப் பார்வையிட்டு பெற்றுச் சென்றனர். வான்மதி மாத இதழுக்கான சந்தாவை பொதுமக்கள் செலுத்தினர்.


வான்மதி மாத இதழ் பரிசளிப்பு

முத்துக்குமரன் திருப்புத்தூர் வட்டம் கண்டவராயன்பட்டியில் உள்ள ட்ரூபா ட்ரஸ்டின் முதியோர் இல்லத்தில் இனிப்புகள் வழங்கப்பட்டு மனித உரிமைகள் தினம் கொண்டாடப்பட்டது. படத்தில் மனித உரிமைகள் கழகத்தின் அமைப்பாளர் மற்றும் நிர்வாகிகளுடன் வான்மதி இதழாசிரியர்.

திருப்புத்தூர் கிளை நூலகத்தில் புரவலர்கள் சேர்ப்பு நடைபெற்றது. அதில் வெல்டிங் பணி செய்யும் முகமது கனி என்பவர் புரவலர் தொகையான ரூ. 1000/- ஐ குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரிடம் வழங்கியபோது எடுத்த படம்.

திருக்கோஷ்டியூர் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு (140 பேருக்கு) அவ்வூரின் பிரபல சோதிடர் சுவாமிநாதன் தேசிகர் அவர்கள் வான்மதி இதழைப் பரிசாக வழங்கினார். உடன் வான்மதி ஆசிரியர், பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் இருக்கின்றனர்.



திருப்புத்தூர் ஊராட்சி ஒன்றிய கற்றலில் இனிமைப் பள்ளி மாணவர்களுக்கு மனித உரிமைகள் கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் திரு. க. தங்கபாண்டியன் அவர்கள் வான்மதி மாத இதழைப் பரிசாக வழங்கிய போது எடுத்தபடம். அருகில் பள்ளித் தலைமை ஆசிரியை, மற்றும் நிர்வாகிகளுடன் வான்மதி ஆசிரியர்

Thursday, August 07, 2008




 





<a href="http://www.roadtogrammar.com">www.roadtogrammar.com</a>

Saturday, July 19, 2008

பேசுவது சரியா?


 

பேச்சு என்பது சாதாரண விசயமா என்ன?

    பலரை தம் வசத்தால் கட்டிப் போடும் அளவிற்குப் பேச்சு அற்புதமான கலை.

    சிறப்பாகப் பேசி காரியம் சாதித்துக் கொள்ள முடியும் என்ற உண்மையை சிலர்தான் உணர்ந்திருக்கிறார்கள். அதனால் பயனும் அடைந்திருக்கிறார்கள்.

    நமக்கும் பேசத் தெரியும் என்று மற்றவர்களைப் புண்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

    இன்னும் சாதுர்யமாகப் பேசி தமது பொருட்களை விற்று பணம் சம்பாதிக்கவும் முடியும் என்பதை உணர்ந்தவர்கள் நல்ல வியாபாரிகள்.

    ஒருவரை அவரது பேச்சால் மதிப்பிட்டுவிட முடியும்.

    சம்பந்தமில்லாமல் எதையாவது பேசிக் கொண்டிருப்பது. மற்றவர்கள் சொல்லுகிற செய்தியைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் தான் நினைத்ததை மட்டும் சொல்வது என்கிற இந்தப் பேச்சால் பயனொன்றுமில்லை!

    மொத்தத்தில் சொல்ல வேண்டுமானால் அதிகம் பேசுவதைத் தவிர்த்தல் நல்லது.

    அலுவல் வேலையாக எங்கு சென்றாலும் அங்கே அநாவசியமாகவோ, மிகையாகவோ பேசுவதையோ தவிர்த்தல் நல்லது.

    எனது 13 வயதில் உறவினர் ஒருவர் என்னைத் திரைப்படத்திற்கு அழைத்துச் சென்றார். தன்னை ஒரு நாளிதழ் நிருபர் என அடையாள அட்டையை திரைப்பட உரிமையாளரிடம் காண்பித்து இலவசமாக திரைப்படம் பார்க்க அனுமதிக்குமாறு கேட்டார். அதை ஒரு வரியில் சொல்லிவிட்டிருந்தாலும் பரவாயில்லை. அவரைப் பற்றி அதிகமாகக் கதை அளந்தார். அவையனைத்தும் மிகை என எனக்குத் தெரிந்தது. திரையரங்க உரிமையாளர் அவரது பேச்சைக் கேட்க முடியாமல் நெளிந்தார். இவர் விடுவதாக இல்லை. சிறிது நேரம் கழித்து, அந்த உரிமையாளர்,

    "நாங்கள் யாரையும் இலவசமாக அனுமதிப்பதில்லை; போய் வாருங்கள்!" என்றார்.

    நானும் எனது உறவினரை 'வாருங்கள் போய்விடுவோம்' என்று அழைத்தேன். அவர் சிறிது நேரம் யோசித்துவிட்டு வேறு வழியில்லாமல் பணத்தைக் கொடுத்து அனுமதிச்சீட்டு (டிக்கெட்) வாங்கி உள்ளே நுழைந்தார். நானும் வேண்டா வெறுப்பாக திரையரங்கிற்குள் சென்றேன்.

    அதேபோல் மற்றொருமுறை மீண்டும் என்னை வேறு இடத்திற்கு அழைத்தார் அந்த உறவினர். ஆனால், அவர் ஊரிலிருந்து வருவது தெரிந்தாலே ஓடி ஒளிந்து விடுவேன். அந்த அளவிற்கு அவரது பேச்சைக் கேட்க முடியாது.

    தொண தொணவென்று, ஓயாமல் பெய்யும் மழையைப் போல் சிலரது பேச்சு இருக்கும். இருதய நோயுள்ளவர்கள் அந்தப் பேச்சைத் தொடர்ந்து கேட்டால் இதய வலி மீண்டும் வந்துவிடும்!


 

    அது சுவாரஸ்யமான பேச்சாக இல்லாவிட்டால் அந்தப் பேச்சினைக் கேட்டதும் தலை வலி வந்துவிடும். ஒரு சில நாட்களில் நானும் அப்படிப்பட்டவர்களின் பேச்சைக் கேட்டு தலைவலியால் அவதிப்பட்டிருக் கிறேன்.

    பொது இடங்களில் செல்லும்போது, பேருந்துகளில் பயணிக்கும்போது சிலர் பேச்சு கொடுப்பார்கள். இங்கு உற்று நோக்க வேண்டிய விசயம் என்னவென்றால்,

    உங்கள் அருகில் நீண்டதூரம் ஒருவரோ அல்லது சிலரோ பயணம் செய்கிறார்கள். நீங்களும் அவர்களிடம் பேசலாம் என்று நினைத்து பேச்சைத் துவக்குகிறீர்கள். நல்லதுதான். ஆனால் நம் பேச்சை அவர் காது கொடுத்து கேட்கிறாரா? இல்லை நம் பேச்சில் அவர் ஆர்வமின்றி காணப்படுகிறாரா என்று கவனிக்க வேண்டும். இதையயல்லாம் கவனிக்காமல் நம் பேச்சைக் கேட்க ஆள் கிடைத்துவிட்டார் என்று மணிக்கணக்கில் வாயை மூடாமல் பேசிக் கொண்டிருக்கக் கூடாது!


    நச்சென்று நாலு வரிகளில் பேசி முடித்துவிட வேண்டும். அலைபேசியின்மூலம் (செல்போன்) மற்றவர்கள் நம்மை அழைத்துப் பேசும்போது அவர்கள் சொல்லும் தகவலை வேகமாகக் கேட்பதோடு அதற்குப் பதிலை விரைவாகச் சொல்லிவிட வேண்டும். நாமும் மெதுவாக, 'அப்படியா' என்று இழுத்து அவருக்கு கட்டணத்தை அதிகப்படுத்திவிடக்கூடாது! அடுத்த முறை நமக்குப் பேசுவதென்றாலே யோசிக்க ஆரம்பித்து விடுவார்.

    நாம் மற்றவரிடம் உரையாடிக் கொண்டிருக்கும் போதும் ஒரு முறை அல்லது இருமுறை நாமே பேசிக் கொண்டிருக்கும்போதும் அதற்கு அவர் விருப்பத்துடன்தான் பதில் தருகிறாரா என்று கவனிக்க வேண்டும். நம் பேச்சைத் தொடர்ந்து கேட்க விரும்பினால் அவரும் பதில் கருத்தைத் தெரிவிக்க வேண்டும். அப்படி பதில் ஏதும் பேசாமல் இருந்தால் உங்கள் பேச்சை நிறுத்திக் கொள்வது நல்லது. விருப்பமில்லாத உரையாடல் பயனற்றது.

    இதே முறையைத்தான் மேடைப் பேச்சாளர்களும் கவனித்துக் கொள்ள வேண்டும். மணிக்கணக்கில் பேசினால்தான் தம்மைச் சிறந்த பேச்சாளர் என்று கருதுவார்கள் என்று விபரீத எண்ணத்தை வளர்த்துக் கொள்ளக்கூடாது. சில நிமிடங்களில் சிறப்பாகப் பேசினாலும் நல்ல பேச்சாளர் என்ற பெயரை வாங்கமுடியும். நாம் சொல்ல விரும்பும் கருத்துக்களை சுவைபடச் சொல்ல வேண்டும். அதைத் திறம்பட பயன்படுத்துகிறவர்கள் பேச்சாளர் என்ற பெயரைத் தட்டிச் செல்கின்றனர். சிலர் குடிகாரர்கள் உளறுவதைப் போல் பேசி கல்லெறி வாங்கிக் கொள்வதும் உண்டு.

    இன்னும் சிலர் மேடையைக் கண்டதும் அவர்களுக்குப் பேச வேண்டும் என்ற ஆவல் பிறந்து விடும். மைக்கைத் தர மாட்டார்களா என ஏங்கிச் சாவதும் உண்டு. கொலை பட்டினியாய் கிடந்தவனுக்கு உணவைக் கண்டால் எப்படி தோன்றுமோ அதைப் போல் மைக்கில் பேச வேண்டும் என்று தவமாய்க் கிடப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் சாதாரண நாட்களில் மாட்டினாலும் பரவாயில்லை... 'மைக்'குடன் இருக்கும்போது சென்றுவிடக்கூடாது! அப்படிச் சென்று அந்தப் பேச்சைக் கேட்டு பைத்தியங்கள் வேண்டுமானால் தெளியலாம்... நாம் அகப்பட்டால்.... (?)

    பேச்சு என்பதில் இவ்வளவு பிரச்சினை இருக்கிறதா?

    ஏன் இல்லை.... முன்பு எமது நண்பரை அவரது அலுவலகத்தில் சந்திக்கும் வேளையில் அவரது மற்றொரு நண்பரும் அங்கு வருவார். அவர் வந்து சில மணி நேரத்திற்குப் பிறகு ஒரு பிரச்சினையோடுதான் வெளியே செல்வார். முதல் இருமுறை இது யதார்த்தம் என்றுதான் நினைத்தேன். ஆனால் இன்னும் சில முறை ஒரே மாதிரியான பிரச்சினைகள் வந்தபோதுதான் அவரது பேச்சுதான் இந்த வில்லங்கத்தை உருவாக்கியிருக்கிறது என்பதையறிந்தேன்.     


    நண்பர்களுடன் இலக்கியம் பேசிக் கொண்டிருந்தால் அதிலுள்ள பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவார்.

    விளையாட்டைப் பற்றிப் பேசினால் அதில் ஆழமாகப் பேசுவது போல் பாவனை செய்து விடாப்படியாக தமது கருத்தை வலியுறுத்துவார்.

    இப்படி எந்தக் கருத்தைப் பேசினாலும் நாங்கள் பகிர்ந்து கொள்ளும்வரை அந்தப் பேச்சில் சுவாரஸ்யம் இருக்கும். இவர் கலந்து கொண்டால் புதிய பிரச்சினை பிறக்கும். தொடங்கப்பட்ட பேச்சுக்கு முழுமை தெரியாமலும் முடிவு தெரியாமலும் போய்விடும். இப்படியும் பிறவிகளா? என நொந்துதான் போவோம்.

    அவர் ஒரு பள்ளி ஆசிரியர். அடிக்கடி நமது அலுவலகம் வந்து போவார். வரும் நேரங்களில் தனது வேலையை விட்டுவிட்டு இங்கு பயிலும் மாணவர்களிடம் அவர்களைப் பற்றி விசாரிப்பார்.

    அவர் வரும்போது அவர் அருகில் யாரும் இருக்கக் கூடாது. இருந்தால் அவர் யார்? அவரது என்ன செய்கிறார் என்று வேண்டாத பேச்சுக்களை இழுப்பதும் நடக்கும். நானும் சில நாட்களில் இதைக் கவனித்து விட்டுவிட்டேன். ஒருமுறை ஒரு நபரிடம் கேட்கக் கூடாத கேள்வியைக் கேட்டு அவர்களிடம் கடி வாங்கிக் கொண்டார். அப்போது நான் அவரிடம் என்ன சொல்ல நினைத்தேனோ அதையே அந்த நபர் வாயிலாகப் பதிலடி வாங்கிக் கொண்டார். அந்த நபரிடம் கடி வாங்கியதிலிருந்து இப்போதெல்லாம் அவர் தேவையில்லாமல் யாரிடமும் விசாரணை மேற்கொள்வதில்லை.

    சிலரது பேச்சில் நக்கல் தொனி இருக்கும். தமது பேச்சில் மற்றவரை மட்டம் தட்டும் எண்ணம் குடி கொண்டிருக்கும்.

    நட்பு ரீதியாக எனது நண்பர் ஒருவரை அவரது கணினி கல்வி மையத்திற்குச் சென்று பார்த்தேன். உடன் இன்னொரு நண்பரையும் அழைத்துச் சென்றேன். கணினி கல்வி மையத்தில் பணியாற்றும் சகோதரியிடம் பேசிக் கொண்டிருக்கும்போது இவர் அந்தப் பெண்ணிடம் பேச்சுக் கொடுத்தார். அப்படி பேசிக் கொண்டிருக்கும்போதே,

    "நீ எங்கம்மா கம்ப்யூட்டர் படிச்சே...?" என்று கேட்டார்.

    அதற்கு அந்தப் பெண் ஒரு நிறுவனத்தைக் குறிப்பிட்டுச் சொன்னார்.

    "அந்த நிறுவனத்தை முருகன்தானே நடத்துறான்.... அவன் சரியான மக்குப் பயலாச்சே! அவன்கிட்டயா படிச்சே!" என்று கொஞ்சமும் யோசிக்காமல் கேட்டுவிட்டார்.

    அந்தப் பெண்ணிற்கு அவமானமாகப் போய்விட்டது. நான்கு வார்த்தைகள் நறுக்கென்று முகத்திலடித்தாற்போல கேட்டுவிட்டு வெளியேறிவிட்டார் அந்தப் பெண்.

    "ஏன் ஸார், தேவையில்லாத பேச்சுப் பேசுறீங்க... யாரு இவர்?" என்று என்னிடம் கடிந்து கொண்டான் எனது நண்பன்.

    அறிமுகமில்லாத இடத்தில் அப்படியயன்ன ஒரு விசாரணை? அவரை ஒன்றும் சொல்லவில்லை.

    வேறு என்ன செய்வது?

    சிலர் தங்களது வாயால் தங்களைக் கெடுத்துக் கொள்கிறார்கள் என்பதை அப்போது புரிந்து கொண்டேன். அவர்களிடம் என்ன விளக்கம் சொல்வது?

    ஒருவரின் மனம் கருணை உள்ளமாக இருந்தால் அவர் வெளிப்படுத்தும் வார்த்தைகளில் கனிவு வெளிப்படும்.

    நம்மிடம் உதவி கேட்பவர்களாக இருந்தாலும்,

    "உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்? " என்று கனிவுடன் கேளுங்கள்.

    பக்கத்து வீட்டுச் சிறுவன் நம் வீட்டில் உள்ள சிறு பொருட்களை உடைத்துவிட்டானா?

    "என்னடா தம்பி, உடைச்சிட்டே...." என்று செல்லமாகக் கண்டியுங்கள்.

    அறியாமல் நிகழ்ந்த தவறுகளை பெருந்தன்மையுடன் மன்னித்து விடுங்கள்.

    இதுபோன்ற சூழ்நிலைகளில் நம்முடைய அணுகுமுறை மற்றவர்களை நம் பக்கம் ஈர்க்க முடியும். ஆனால், நமது கோபத்தை வெளிப்படுத்த, நமது இழப்பை மற்றவர்களுக்குத் தெரிவிக்க வருந்திக் கத்தாதீர்கள்.

    உடைந்த சிறு பொருட்களின் விலை குறைவாகத்தான் இருக்கும். ஆனால், அதற்காக நாம் கோபப்பட்டு அதனால் நமது மனநிலை பாதிக்கப்பட்டு வேண்டாத மருத்துவச் செலவு ஏன்? அது மட்டுமில்லாமல் நமது குழந்தை மற்றவர்கள் வீட்டில் அதே தவறு செய்து அவர்கள் திட்டி விரட்டினால் நமது மனநிலை எப்படியிருக்கும்?


    சிலர் பேச்சில் ஆளை வீழ்த்திவிடுவார்கள்.

    சிலரது பேச்சில் மற்றவர்கள் அடங்கிப் போவார்கள்.

    சிலரது பேச்சை வெறுத்து ஒதுக்குவார்கள்.

    சிலரது பேச்சில் மயங்கிப் போவார்கள்.

    இதில் நீங்கள் எந்த வகையினராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? நமது பேச்சில் மயங்கவும் வேண்டாம், கிரங்கவும் வேண்டாம், வெறுத்து ஒதுக்கும்படிஇல்லாமல் பார்த்துக் கொண்டாலே போதும்.

    நமது சுற்றத்தை நட்பை உறவினர்களை பேச்சில் வசீகரப்படுத்துவது எப்படி?

    தவறுகளைச் சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்கக்கூடாது!

    மறக்க நினைக்கும் பழைய சம்பவங்களை நினைவுபடுத்தி அவர்கள் மனதைப் புண்படுத்தக்கூடாது!

    நல்ல நாட்களில் நல்ல வார்த்தைகளைப் பேச வேண்டும்! முதலில் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்ள வேண்டும்.

    உறவினர் நண்பர்கள் வீட்டில் சுகமில்லாமல் இருந்தால் தொடர்ந்து அவர்களை நலம் விசாரித்து அவர்களது நலனில் அக்கறை கொள்ளுங்கள்.

    ஒவ்வொரு முறை பார்க்கும்போதும், தொலைபேசி வாயிலாக பேசும்போதும் நலம் விசாரிப்பது முக்கியம்!

    மற்றவர்கள் நமது பேச்சைக் கேட்க விரும்பும் நிலைக்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.

    அதிரடியாகப் பேசக் கூடாது!

    பிறர் முன்னிலையில் யாரையும் மட்டம் தட்டிப் பேசக் கூடாது! மற்றவர்களை கீழ்த்தரமாக எண்ணும் பாங்கு மிக மிக மோசமானது! அதைத் தவிர்த்துக் கொள்வது நல்லது.

    பலர் முன்னிலையில் அறிவுரைகளை வழங்கக் கூடாது. தனியே அழைத்து மெதுவாக உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள். உங்கள் கருத்தைத் திணிக்காதீர்கள்!

    நீங்கள் விபரம் தெரிந்தவர் போலவும், மற்றவர்கள் விபரமற்றவர்கள் என்று தெரிவதுபோல் நடந்து கொள்ளக்கூடாது!

    உங்களுக்கு எல்லாம் தெரிந்திருந்தாலும், அந்தக் கட்டாயம் வரும்போது பேசுங்கள். பேச வாய்ப்புக் கிடைத்தால் மட்டுமே பேசுங்கள்.

    நான் சொல்வது சரிதானே?

தோழா... தோழா...

நல்ல தோழன் ஒரு தாய்க்கு ஒப்பானவன் என்று சொல்லலாம். அது எப்படி?

    தாய்க்கு ஈடாக நண்பன் என்பவன் இருக்க முடியும் என்கிறீர்களா?

    எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் நடந்து கொள்பவள்தான் தாய் என்பவள். எந்தச் சூழ்நிலையிலும் தம்மைவிட தம் குழந்தைகளின் நலனையே கருத்தில் கொள்பவள் நல்ல தாய். தாயின் இலக்கணம் இதுதான். நண்பன் என்பவனும் அப்படித்தான் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் அது நட்பு.

    தம்மில் சரிபாதியாக நினைத்து துன்பம் வரும்போது அரவணைத்தும், பிரச்சினைகள் தோன்றும்போது பாதுகாத்தும், கொண்டாட்டங்களிலும் கூடவே இருப்பவன்தான் நல்ல நண்பன்.

    ஆனால், இப்படிப்பட்ட நண்பர்களை அத்தி பூத்தாற்போல்தான் பார்க்க முடிகிறது. நீங்கள்கூட அப்படிப்பட்ட நண்பரைப் பெற்றிருந்தால் அதிர்ஷ்டசாலிதான்!

    நண்பர்கள் யார்?

    நெருங்கிப் பழகிவிட்டால் அவர்கள் நண்பர்களாகிவிடுவார்களா?

    பக்கத்து வீட்டுக்காரர் நீண்ட காலம் பழகுகிறார் அவர் நமக்கு நல்ல நண்பராகிவிடுவாரா?

    ஒரு ஆபத்தின்போது கூடவே இருந்து உதவினார். அதனால் அவரை நண்பர் என்று சொல்லிவிட முடியுமா?

    ஒரே வகுப்பில் ஒன்றாய் இருக்கும்போது பழக்கம் உருவாகிறது. அடிக்கடி சந்திப்பு நிகழும்போது ஏற்படும் பழக்கம் நட்பாகிவிடுமா?

    அப்படி நட்பானால் அந்தப் பழக்கம் சூழ்நிலையால் வெவ்வேறு இடங்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டால் அந்தத் தொடர்பு துண்டிக்கப்பட்டு நட்பு முறிந்து போய்விடுமே?

    ஒரே வித கருத்துக்கள் ஒரே மாதிரியான உணர்வுகள் கொண்டிருப்பவர்களும் நண்பர்களா கின்றனர் என்பது உண்மைதான் என்றாலும், கால ஓட்டத்தில் அதே கருத்துக்களில் மாற்றங்கள் ஏற்பட்டு அவர்களிடமும் கருத்து வேறுபாடு தோன்றினால் இப்போது அவர்களின் நட்பு என்னவாகும்?

    மனம் ஒரு குரங்குதான். அது மாற்றம் பெற்று அங்கேயும் இங்கேயும் திரிவது இயல்புதான்.

    ஆனால், கொண்ட கொள்கையில் விடாப்பிடியாக இருப்பவன்தான் நல்ல மனிதனாக இருக்க முடியும். நேற்று ஒரு மாதிரியாகவும், இன்று வேறு மாதிரியாகவும், தனது இஷ்டத்திற்கு தன்னை மாற்றிக் கொள்பவன் காரியம் சாதித்துக் கொள்பவனாகத்தான் இருக்க முடியும்.

    பிறரின் உணர்வுகளை மதிக்கவும், பிறரது தேவையை உணர்ந்து உதவுபவனும் நல்ல மனிதப் பண்புள்ளவன் என்றே கூறலாம்.

    நல்ல நண்பனுக்கு இந்த குணநலன்கள் இருப்பது அவசியம்.

    முதலில் நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும்போது கவனம் வேண்டும்.

    பழக்கம் என்பது வேறு. நட்பு என்பது வேறு.

    நல்ல பழக்கத்தை நட்பாக மாற்றிக் கொள்ளலாம். அதை நம் அறிவு செயல்படுத்தாமல் போனாலும், மனம் ஏற்றுக் கொண்டுவிடும். அதன் போக்கிற்கு விட்டுவிடலாம்.

    மகிழ்ச்சியை, துன்பத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு வாழ்நாள் முழுவதும் கூடவே வரும் துணையை நண்பர்களாகக் கருதிக் கொள்ளலாம். ஓர் ஆண் இன்னொரு ஆணை தோழனாகவும், ஒரு பெண் இன்னொரு பெண்ணைத் தோழியாகவும் ஏற்றுக் கொள்கிறார்கள்.

    திருமணத்திற்குப் பிறகு பெரும்பாலும் பெண்ணின் நட்பு தொடர்பு இல்லாமல் போய்விடுகிறது. அது சூழ்நிலை என்பதால் இதைப் பெரிதாகக் கருத முடியாது.

    ஆனால், ஆணைப் பொருத்தவரை நல்ல நண்பர்கள் எப்போதும் கூடவே இருக்க வாய்ப்புகள் அதிகம். இல்லாது போனாலும், தொடர்பைத் தொடர்வதற்கு ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன.

    வெளிநாடு போனாலும் அந்த நண்பர்களின் அன்பு குறையாமலும் மாறாமலும் இருக்க முடியும்.

    சிறுவயதிலிருந்து கல்லூரி படிப்பு வரை ஒரே நண்பர்களாக இருந்தனர். திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாளிலிருந்தே அவன் மற்ற நண்பர்களிடம் முகம் கொடுத்துப் பேசுவதில்லை. பத்திரிகை வைத்து அழைத்த நாளில் பேசியதோடு சரி. அதன்பின் நண்பர்களில் எவரோடும் தொடர்பு வைத்துக் கொள்ளவில்லை. அந்த நாட்களில் அவனது நண்பர்கள் தாமாக வலிய வந்து அவனைச் சந்திக்கிறார்கள். அப்போதெல்லாம் திருமண வேலையாக வெளியூர் செல்ல வேண்டியிருக்கிறது என்று நழுவிக் கொள்வான். இவர்கள் இந்த மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை. தங்கள் சகோதரிகளின் திருமணத்தில் எல்லாம் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தோம். ஆனால் நண்பனின் திருமணத்தில் மூன்றாவது நபரைப் போலல்லவா கலந்து கொள்ள வேண்டியிருக்கிறது என்று நொந்துபோனார்கள்.

    இப்படி பச்சோந்தி போல் நிறம் மாறும் நட்பை நினைத்து மனம் கலங்க வேண்டியதில்லை.

    பெரும்பாலும் நட்பை சிலர்தான் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

    பலர், வாய்ப்பு வரும்போது பழகிக் கொள்வதும் தேவையில்லாது போனால் வெட்டிக் கொள்வதுமாய் இருக்கிறார்கள்.

    ஒருவனுக்கு நண்பர்கள் பலர் இருக்கலாம். ஆனால் நெருக்கமான நண்பர் ஒருவராகத்தான் இருக்க முடியும். தமது இரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள, அந்த இரகசியங்களைப் பாதுகாக்கும் நண்பர்கள் நல்ல நண்பர்கள்.

    நான்குபேரும் இணைபிரியாத நண்பர்களாக இருக்கலாம். ஆனால், நான்குபேரும் ஒரே நேரத்தில் சந்திக்க இயலாதபோதும், தனித்தனியே ஒவ்வொரு நண்பரும் சந்தித்துக் கொள்ளும்போதும் ஒருவரைப் பற்றி மற்றவர் குறை கூறுவதும், ரகசியங்களைப் பகிர்ந்து கொள்வதும் நல்ல நட்பிற்கு அடையாளம் அல்ல. இப்படிப்பட்ட உறவை பழக்கம் என்று வேண்டுமானால் கூறலாம். இதை நட்பு அழைப்பது அவ்வளவு சரியாக இருக்காது.

    வீட்டு விசேடங்களில் கலந்து கொண்டு விருந்துண்பவர்கள் எல்லோரும் நண்பர்களாகிவிட முடியுமா?

    தன்னில் சரிபாதியாக நினைப்பவன்தான் நல்ல நண்பனாக இருக்க முடியும். அவர்களுக்குத்தான் உள்ளத்தில் இடம் கொடுக்க வேண்டும்.

    நீங்கள் உங்கள் நண்பரை இன்னும் மனதளவில் நெருங்கவேண்டும் என்று விரும்பினால்...

    உங்கள் நண்பனின் நலனில் அக்கறை கொள்ளுங்கள்.

    அவன் தீயவழியில் செல்பவனாக இருந்தால் தடுத்து நிறுத்துங்கள்.

    தேவையானபோது ஆலோசனை வழங்குங்கள். உங்களின் எல்லா ஆலோசனைகளையும் அவர் ஏற்க முடியாது என்றாலும் உங்கள் ஆலோசனையைத் தவிர்ப்பவன் நல்ல நண்பனாக இருக்க முடியாது.

    உங்கள் நண்பனின் தவறுகளைச் சுட்டிக் காட்டி நேரடியாகக் கண்டியுங்கள். திறமைகளை மற்றவர்களிடமும் கூறுங்கள். இது நல்ல உறவை வளர்க்கும்.

    உங்களைப் பற்றி தவறான கருத்துக்களைப் பரப்புகிறவன் நல்ல நண்பன் அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

    நண்பனுக்கு அவ்வப்போது உதவுங்கள். அவன் உயர்வதற்கு வேண்டிய உதவிகளைச் செய்யுங்கள். இல்லையயனில் உதவி செய்பவர்களை அறிமுகம் செய்து வையுங்கள்.

    நண்பனாய் ஏற்றுக் கொண்டபிறகு அவரது குறைகளை அவரிடம் மட்டுமே நேரடியாகச் சொல்லுங்கள். பிறரிடம் கூறி நட்பின் புனிதத்தைக் கெடுக்காதீர்கள்.

    உங்களது குடும்பத்தின் ஒருவனாக ஏற்றுக் கொண்டால் மட்டுமே அவன் நல்ல நண்பனாக இருக்க முடியும். வீட்டின் வாசற்படி வரை நிறுத்தி பேசுவது நெருக்கமான நட்புக்கு அழகல்ல.

    அதுபோல உங்களை வீட்டின் வரவேற்பறையிலே மட்டும் அனுமதித்துப் பேசும் நண்பர் நெருக்கமான நண்பராக இருக்க முடியாது. கண்ணியமான நட்பு நண்பனை தன் வீட்டின் உள்ளே அழைத்து செல்லத் தயங்காது.

    அந்த இரு நண்பர்களும் அவ்வளவு நெருக்கமானவர்கள். அவர்களை சிலர் கணவன் மனைவி என்றே கேலி செய்வார்கள். அப்படி நெருங்கிப் பழகுவார்கள்.

    எங்கு போனாலும் ஒன்றாகச் செல்வார்கள். திரைப்படத்தில் ஏற்கெனவே நாம் பார்த்ததுபோல் இருவரும் ஒரே பெண்ணைக் காதலித்தார்கள். இதனால் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு நிரந்தரமாகப் பிரிந்து போனார்கள்.

    மற்ற நண்பர்களைச் சந்திக்கும்போது, ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசுவதும், அதனால் விரோதம் வளர்த்துக் கொள்வதும்தான் நிகழ்ந்தது.

    அன்பின் அடையாளமாய் தந்த பரிசுகள் தூக்கி வீசப்பட்டன. ஒரு பெண்ணால் (அவள் என்ன செய்வாள் பாவம்!) நட்பு பாதிக்கப்பட்டது. இது நல்ல நட்பின் அடையாளமா?

    இல்லை.

    அன்பைப் பகிர்ந்து கொள்வது மட்டுமல்ல, நண்பருக்காக எதையும் விட்டுக் கொடுப்பவன்தான் நல்ல நண்பன். அதற்காக உயிருக்குயிராக காதலித்த காதலியை விட்டுத் தர முடியாது. அந்தப்பெண் யாரை விரும்புகிறாள் என்பதும் இங்கு முக்கியமானது.

    நல்ல நட்பு நம்மை துன்பத்திலிருந்து மீட்டுவிடும்; ஆபத்தின்போது உறுதுணையாய் நின்று உதவும்.

    ஆனால், அப்படிப்பட்ட நண்பர்கள் கிடைப்பதுதான் கடினமாக இருக்கிறது. ஆபத்து வரும் என்று தெரிந்தவுடனே கழன்று கொள்பவர்கள் தான்அதிகம் இருக்கிறார்கள்.

    அது மட்டுமல்ல தனக்கு உதவி செய்யும் நண்பர்களை மட்டும் தம் பக்கத்தில் வைத்துக் கொள்பவர்களும் இருக்கிறார்கள்.

    காரியத்திற்காக மட்டும் பழகி தனக்கு வேண்டியதைச் சாதித்துக் கொண்ட பின் புறம்பேசும் கயவர்களை நண்பர்களாக ஏற்றுக் கொள்ளக் கூடாது.

    உன் நண்பன் யாரெனச் சொல். உன்னைப் பற்றிச் சொல்கிறேன் என்பார் ஓர் அறிஞர்.

    இதற்கு என்ன பதில் தருவீர்கள். உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர்?

    நல்லவரா? நாணயம் உள்ளவரா? நேர்மை தவறாதவரா?

    இப்படிப்பட்ட நண்பர்கள்தாம் நமக்கு தேவை.

    அல்லது உங்கள் நண்பர் பொய் மட்டும் அதிகம் சொல்பவரா?

    வாய்ப்புகள் கிடைத்தால் மட்டுமே தவறுகள் புரிபவரா?

    அப்படிப்பட்ட நண்பர்களின் பழக்கத்தை உடனே விட்டுவிடுவது நல்லது. ஏனெனில், இன்று நல்லவன்போல் நடிப்பவன், ஆபத்தில் நம்மையே மாட்டி விடவும் செய்வான். எச்சரிக்கை.

    நண்பர்கள் நம்மை அடையாளம் காட்டும் கண்ணாடி என்றே சொல்லலாம்.

    திருடனிடம் சகவாசம் வைத்தால் நம்மையும்தான் காவலர்கள் பிடிப்பார்கள்.

    பெண் பித்தர்களின் தொடர்பு இருந்தால், அவனிடம் பழகியதற்காக சில சந்தர்ப்பங்களில் நாமும் தண்டனை பெறவும் வாய்ப்பிருக்கிறது.

    உங்கள் உயிர் நண்பர் ஆபத்தில் மாட்டிக் கொண்டால் அவரைக் காப்பாற்றுவது உங்கள் கடமை. ஆனால், முன்பே ஆபத்தானவர்கள் என்றறிந்தால் அவர்களின் நட்பை ஏற்றுக் கொள்ளாதீர்கள். தள்ளியே இருங்கள்.

    உங்களுக்கு அறிமுகமானவர் மற்றவரை மட்டுமல்ல, உங்களையும் ஏமாற்றினால், மற்றவர்களுக்குத் துரோகமிழைப்பவன், உங்களுக்கும் அப்படிச் செய்தால், உடனே அவரது நட்பை விட்டு விலகிவிடுங்கள்.

    பள்ளியில் படிக்கும்போது ஏற்படும் சிநேகம், கல்லூரி வாழ்க்கையில் காணாமற் போய்விடுகிறது. கல்லூரியில் ஏற்படும் சிநேகம் திருமண வாழ்க்கைக்குப் பிறகு அஸ்தமனமாகிவிடுகிறது.

     ஆனால், எப்போதும் ஒரே சிநேகம் வாழ்நாள் வரை தொடர்வது அதிசயம்தான்.

    பணம் கூடினால் பந்த பாசம் சிலருக்குக் கண்ணில் தெரியாது. அதுபோல நன்றாக இருந்த நட்பும்கூட அடையாளம் தெரியாமல் போய்விடுகிறது.

    பகட்டாகத் திரிய நினைப்பவர்கள் தம்கூட வரத் தயங்கும் நண்பர்களை இழப்பதுண்டு. அந்த நேரத்தில் பணத்துக்காக சிலர் நண்பர்களைப் போல கூடவே திரிவார்கள். பணம் கரையும்வரை கண்ணில் அகப்படுவார்கள். பணத்தைக் காலி செய்ததும் இவர்கள் ஆள் காணாமற் போய்விடுவார்கள்.

    நல்ல நட்பை இழக்காமல் இருக்க...

    அவசரத் தேவைக்காக நண்பனிடம் கடன் கேட்கலாம். ஆனால் திருப்பித் தந்துவிட வேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டும். அதேபோல் அவர் மறுமுறை கடன் கேட்டாலும் தரும்படியாக நடந்து கொள்ள வேண்டும். யாராக இருந்தாலும் பணம் விசயத்தில் நாணயம் (!) வேண்டும்.

    அதேபோல் நண்பர்கள் அவசரத்திற்காகக் கடன் கேட்கும்போது கொடுங்கள். திருப்பித் தந்து விடுவான் என்ற நம்பிக்கை கொள்ளுங்கள். இதுவும் நல்ல நண்பனுக்கு அடையாளம்தான்.

    நண்பனின் சகோதரி நமக்கும் சகோதரி. நண்பனின் உறவுகள் நமக்கும் நல்ல உறவு என்ற நினைப்போடு நண்பனின் மனைவி நமக்கும் சகோதரிதான் என்ற நினைப்பையும் ஒருபோதும் மறக்காதீர்கள்.

    நண்பனின் நம்பிக்கையை சீர்குலைக்கும்படி நடந்து கொள்ளக் கூடாது.

    நட்பின் இலக்கணத்தை எத்தனையோ திரைப்படங்களில் கண்டிருக்கிறோம். அப்படிப்பட்ட நண்பர்கள் கிடைக்கவில்லையே என ஏங்கும் உள்ளங்களுக்கு, நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள்.

ஆன்மிகமும் பக்தியும்

பகுத்தறிவை நம்புகிறவர்கள் மட்டும் இந்தக் கட்டுரையைப் படியுங்கள்.

    விஞ்ஞானம் இவ்வளவு வேகமாக வளர்கிறதே என்று பெருமைப்படுகிற வேளையில் அதற்குப் போட்டியாக மிக மிக வேகமாக அறியாமையும் வளர்ந்து கொண்டிருப்பது வேதனைக்குரிய விசயம்!

    அதற்குத் துணையாக இந்தப் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மக்களை அறியாமைப் பள்ளத்திற்குள் தள்ளிவிட்டு (அதைத்தான் அறியாத மக்கள் விரும்புகிறார்கள்) மூடத்தனம் என்ற மண்ணைக் கொண்டு மூடிக் கொண்டிருக்கிறார்கள்.

    பாமரர்கள் மட்டுமில்லாமல் படித்தவர்களும் சாஸ்திர சம்பிரதாயங்கள் என்கிற பெயரில் தேவையில்லாத சடங்குகளைக் கட்டிக் கொண்டு முன்னேற முடியாமல் தவிப்பதைக் கண்டு பரிதாபம்தான் மிஞ்சுகிறது.

    உங்கள் வழி நேர் வழியாக இருக்குமானால், தெய்வ நம்பிக்கை அதிக அளவில் இருக்குமானால் நீங்கள் பேய், பிசாசு என்பவற்றை சட்டை செய்ய வேண்டியதில்லை. மன தைரியம் ஒன்றே போதும். பேய், பூதம் என்பவை (இல்லாத ஒன்றிற்கு என்ன விளக்கம்?) உங்களை ஒன்றும் செய்யாது!

    இறைவன் ஒருவன்தான் என்பதை நம்புகிறீர்களா? அப்படியயனில் புராணம் சொல்லும் கட்டுக் கதைகளை நம்பாமல் உங்களுக்குப் பிடித்த கடவுள் ஒருவரை மட்டும் முழுமையாக நம்பி வாழ்க்கையைத் தொடருங்கள்.

    இன்னும் சிலர்,

    "குழந்தை பிறக்க வேண்டுமா? இந்தக் கடவுளைக் கும்பிடுங்கள்;

    வேலை கிடைக்க வேண்டுமா? அந்த ஊருக்குச் சென்று அவரை வழிபடுங்கள்;

    நோய் போக வேண்டுமா? இந்தத் தாயத்தைக் கட்டிக் கொள்ளுங்கள்;

    வெளிநாடு பாக்கியம் கிடைக்க இந்த அம்மனை வழிபடுங்கள்"     என்று பட்டியலிடுவார்கள்

    எனக்கு இதற்கு மேலே பட்டியலிடத் தெரியவில்லை.

    இந்தக் கடவுளை வழிபட்டால் இந்த நோய் போகும். அல்லது இந்த செயல் நடக்கும் என்று அறிந்து சொன்னது யார்? இவர்களுக்கு அந்த அதிகாரத்தை வழங்கியது யார்?

    நோய் தீர வேண்டுமானால் மருத்துவமனை தேவையில்லையா?

    உலகத்தில் கோடிக்கணக்கான மக்கள் தெய்வ நம்பிக்கை உள்ளவர்கள். அனைவரும் மனம் உருகித்தான் வழிபடுகின்றனர். அதே நேரத்தில் அதே மக்கள் ஆயிரக்கணக்கான மருத்துவமனைகளில் நோய் தீர லட்சக்கணக்கில் பணத்தைக் கொட்டி வைத்தியம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறார்கள்? இவர்களையயல்லாம் ஆலயங்களுக்கு அனுப்பினால் இலவசமாக நோய் போய் விடாதா? அப்படியயனில் புதிய புதிய மருத்துவமனைகள் திறந்து கொண்டு அதன்மூலம் கோடிக்கணக்கில் பணத்தை சம்பாதித்துக் கொண்டுதானே இருக்கிறார்கள். கொஞ்சமாவது சிந்திக்க வேண்டும்.

    ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு தெய்வங்கள் என விரதமிருக்கவே நேரம் போய்விடுகிறது. சிந்திக்க எங்கே நேரமிருக்கிறது என்கிறீர்களா?    

    குழந்தை வரம் வேண்டி கோயில் கோயிலாகத் திரிந்தாள் ஒரு பெண். விரதம் இருக்கிறேன் என்று கணவனை அருகில் நெருங்க விடுவதில்லை. அப்புறம் எப்படி குழந்தை பிறக்கும். பைத்தியங்கள் என்று கடிந்து கொண்டார் ஒரு வயதான பெரியவர்.

    இன்னொரு பெண் வேண்டுமளவுக்கு வார்த்தைகளால் தன் கணவனைத் துன்பப்படுத்துவதை அந்தத் தெரு மக்கள் அறிவார்கள். சுமங்கலி பூஜை நடக்கும் வீட்டில் இந்தப் பெண்ணும் கலந்து கொண்டு தாலிக்குப் பொட்டிட்டு அதைக் கும்பிடுவது கண்டதும் மற்றவர்களுக்கு வேடிக்கையாக இருந்தது. அங்கே கணவனை அடிப்பது... இங்கே கணவனுக்குப் பதிலாக தாலியை அணைப்பது. இந்த அறியாமை நிலையைத்தான் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

    நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது எங்களிடம் எங்களது தமிழ் ஆசிரியர் ஒருவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

    "வீட்டில குழந்தைங்களுக்கு அம்மை போட்டிருக்கும். உடனே பெரியவங்க ஆத்தா இறங்கியிருக்கா... ஆத்தா நம்மேல கோபமா இருக்கா.... என்னன்னு தெரியலயே... ன்னு வருத்தப்படுவாங்க... யோசிச்சுப் பாருங்க... சாமி குழந்தைங்கள தண்டிக்குமா? ஆத்தா எப்படி நோயா வருவா? தெய்வம் தன் பிள்ளைங்களைத் தண்டிக்குமா? யோசிச்சுப் பாருங்க..."

    என்றவுடன் அவர் சொன்னதில் அர்த்தம் விளங்கியது. எவ்வளவு ஆழமான விசயம். இவ்வளவு நாள் புரியாமல் போயிற்றே என்று நினைத்துக் கொண்டேன். அன்றைக்கு எங்களிடம் அந்தப் பகுத்தறிந்து சொன்னவர் இன்றும் என் மனதில் ஆழமாய்ப் பதிந்து விட்டார்.

    அவர் சொன்னதை எத்தனை பேர் காதில் வாங்கிக் கொண்டார்கள் என்று தெரியவில்லை.

    ஆனால், இன்றும்கூட வீடுகளில் பாம்பு நுழைந்து விட்டால் அதைப் பார்த்து 'நாகம்மா' என்று கையயடுத்துக் கும்பிடுவதும், பாம்பிற்குப் பால் ஊற்றும் அறியாமை நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

    மற்ற நாட்களில் காக்கைகள் கண்ணுக்குத் தெரியாது. விரதமிடும்போது மட்டுமே காக்கைக்கு சோறு வைக்கத் தோன்றுகிறது நம் பெரியவர்களுக்கு.

    அன்புப் பெரியோர்களே... உங்கள் வீட்டில் நாய்கள், கோழிகள் அல்லது மற்ற ஜீவன்கள் எதுவாயிருந்தாலும் அதற்கு உணவிடுவது என்பது ஜீவகாருண்யம்தான். காக்கைகளும் அதற்கு விதி விலக்கல்ல. ஆனால் விரதம் மேற்கொள்ளும் நாட்கள் மட்டும்தான் சோறிட வேண்டும் என்று நினைப்பது உங்கள் அறியாமைதான்.

    உணவுப் பழக்கத்தில் சிலர் சைவமாகவும் சிலர் அசைவப் பிரியர்களாகவும் இருப்பார்கள். சைவம் சாப்பிடுபவர்கள் நல்லவர்கள் என்றும் அசைவம் சாப்பிடுபவர்கள் கொடூரக்காரர்கள் என்பதோ கிடையாது. அசைவக்காரர்கள் சுவைக்கு அடிமையானவர்களே தவிர ஓர் உயிரைக் கொன்று சாப்பிடவேண்டும் என்று துடிப்பவர்கள் அல்ல.

    ஆனால், விரத நாட்களில் சைவம் மட்டுமே சாப்பிட வேண்டும். விரதம் முடிந்து மறு நிமிடமே அசைவம் சாப்பிடலாம் என்பதும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.

    எந்த உயிரையும் கொல்லக்கூடாது. துன்புறுத்தக் கூடாது என்கிறது ஒவ்வொரு சமயமும். அதை வலியுறுத்தியே இறைவழிபாட்டின்போது ஓர் உயிரைக் கொன்று அதைச் சாப்பிடுவது கூடாது என்று ஒதுக்கி வைத்தனர். ஆனால் பெரும்பாலானோர் பழனிக்கோ அல்லது மற்ற ஆலயங்களுக்கோ விரதமிருந்து செல்லும்போது சைவத்தையும் வழிபாடு முடிந்த கையோடு கோழியடித்துச் சாப்பிடத் துடிப்பதும் நல்ல வழிபாடாக எனக்குத் தெரியவில்லை.

    இறைவழிபாடு மட்டும் ஆன்மிகமாகிவிடாது. சதா இறைவனைப் புகழ்வதும், இறைவனுக்கு மாலையிடுவதும், கோயிலில் நேர்ந்து கொண்டு அதை நிவர்த்தி செய்வதும் ஆன்மிகமாகிவிடாது. இது வெறும் பக்தியே. இறைவனுக்கு நன்றி செலுத்துகிறோம், அவ்வளவே. இந்த நன்றி நவிலல் நல்லதுதான் என்றாலும் நம் சுற்றத்திலுள்ளவர்களைப் பகைத்துக் கொண்டு, நண்பர்களிடம் நல்ல பெயரை வாங்காமல், உதவி கேட்டு வருபவர்களுக்கு உதவாமல் இருப்பவர்கள் எத்தனை முறை தொழுதாலும் தெய்வ அருள் கிடைப்பதில்லை என்பதையும் உணரவேண்டும்.


 


 

    மற்றவரிடம் ஒன்றை இரவல் வாங்குகிறோம். அதற்கு அவரிடம் நன்றி கூறுகிறோம். அதைப்போல்தான் இறைவழிபாடும். உங்களைப் படைத்ததற்காக நீங்கள் நன்றி தெரிவிக்கிறீர்கள். அவ்வளவே... நீங்கள் நன்றி தெரிவிக்காவிட்டாலும் உங்களை இறைவன் ஒன்றும் கோபித்துக் கொள்ள மாட்டார்.

    உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் உணவிடுகிறீர்கள். அதற்கு தினமும் உங்கள் குழந்தை உங்களிடம்,

    "அம்மா இன்று உணவிட்டதற்காக உங்களுக்கு நன்றி!" என்கிறதா?

    அதுபோல்தான் நம்மைப் படைத்த இறைவனை வழிபட்டாலும், வழிபடாவிட்டாலும் அவர் உங்களை காப்பார். ஏனெனில் நாமெல்லோரும் அவரின் குழந்தைகள்.

    சதா கோயிலுக்கு சென்று ஒவ்வொரு விக்ரகத்தையும் வழிபட்டு, கும்பாபிஷேகம் என்றதும் அங்கும் ஓடி நமது நாட்களில் பாதி நாட்களை அறியாமையில் கழித்துவிட்டோம்.

    இறைவழிபாட்டை, நீங்கள் கண்மூடி ஒரு நிமிடம்

    "இறைவா! எங்களுக்கு வாழ்வளித்த உனக்கு நன்றி! எல்லோரையும் நலமுடன் வளமுடன் இருக்கச் செய்" என்று நினைத்தாலே போதும். மறு விநாடி உங்களது எண்ணம் அடுத்த செய்யக்கூடிய வேலை பற்றியதாக இருக்கட்டும்.

    ஆனால், இறைவனை நெருங்குவதற்கு இறையருள் தங்கள்மீது கிடைப்பதற்கு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லையே என்று நினைக்கும்போது வருத்தம்தான் வருகிறது.

    இறைவனை நினைத்து (நினைக்காவிட்டாலும் தான்) நீங்கள் நினைக்கும் செய்யும் ஒவ்வொரு காரியமும் வெற்றி பெறும் எப்படி?

    துன்பம் வரும் வேளையில் கலங்காதீர்கள். துன்பம் யாருக்கும் நிரந்தரமில்லை. அது ஒரு விருந்தாளி போல. ஒவ்வொருவரின் கதவைத் தட்டிக் கொண்டே சென்று விடும். திறக்க நினைப்பவர்கள் வீட்டில் சில நாட்கள் தங்கும். நீங்கள் அதை நீண்ட காலம் உபசரிக்க நினைத்தால் ஒழிய அது உங்களைவிட்டுப் பிரியாது.

    உதவுங்கள். எளியவர்களுக்கு வறியவர்களுக்கு பசியயன்று கேட்பவர்களுக்கு உணவிடுங்கள்.

    அன்னதானம் செய்ய விரும்புகிறவர்கள் பொருளுதவி கேட்டால் கொடுங்கள். அதே அன்னதானத்தில் நீங்களும் கலந்து கொள்ள நினைக்காதீர்கள். இல்லாதவர்கள் பெறுவது தானம். சாப்பாட்டிற்கு வழியில்லாதவர்களுக்கு உணவிடுவதே அன்னதானம். அங்கு போய் அமர்ந்து கொண்டு இறைவனின் பிரசாதம் என்று ஏழைகளுக்குச் சேர வேண்டிய உணவைத் தட்டிப் பறிக்காதீர்!

    பெரிய பெரிய கோயில்களுக்குச் சென்று அங்கு ஆயிரம் லட்சம் என்று உண்டியலில் போடும் பணத்தை உங்கள் வீட்டருகே துன்பப்படும் ஏழைகளுக்கு கொடுத்து உதவலாம். படிக்கத் துடிக்கும் பிஞ்சுகளுக்கு கல்வி தானம் செய்யலாம். இதுவே உங்களை இறைவனின் பக்கத்தில் அமர்த்தும் எளிய வழி.

    அந்த இஸ்லாமிய நண்பர் கொஞ்சம் படித்தவர். இருந்தாலும் பகுத்தறிவோடு பேசுகிறார். அவரது ஒரு வயது குழந்தைக்கு முடி இறக்கி கிடா வெட்டி உணவிட வேண்டும் என்று அவர்கள் பெற்றோர் முடிவெடுத்து கூறினார்கள். அவரும் இவர்களது பேச்சை ஏற்றுக் கொள்ளாமல்,

    "நாமளே கிடா வெட்டி நாமளே சாப்பிட்டுக்கிறதா? வேண்டாம். 10 ஏழைகளுக்கு அன்னதானம் கொடுப்போம். இல்லேனா பரமசிவம் குழந்தைக்கு ஆபரேசன் செலவுக்கு அந்த ரெண்டாயிரத்தக் கொடுத்திடுவோம். தம்பிக்கு இங்கேயே முடி இறக்கிக்கலாம்" என்றார். அவர் சொன்னதைக் கேட்டதும் வியந்து போனேன்.

    உலக நடப்புகளை ஒரு கண்ணோட்டத்தில் பார்த்தால் வாழ்வதற்கு நம்பிக்கை போய்விடும். விலைவாசி ஏற்றம், கொலை, கொள்ளை, விபத்து, நெருங்கிய உறவுகளின் பிரிவுகள் என அத்தனையும் வந்து நமது நம்பிக்கையை இழக்கச் செய்யும் நேரத்தில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட சடங்கு முறைகளும் இந்த அவநம்பிக்கையோடு வாழ்க்கையை வெறுக்க செய்துவிடும்.

    செவ்வாய் தோ­ம் உள்ள பெண்ணைத் திருமணம் செய்து கொண்டால் மணமகன் இறந்து போய்விடுவார் என்ற நம்பிக்கை ஜாதகத்தை நம்புகிறவர்களிடம் உள்ளது.

    இந்தச் சாதி வெறிபிடித்த மக்கள் கூட்டத்தில் ஒரே சாதியில் பெண்ணையோ, பையனையோ தேடி மணம் முடிப்பது என்பது அரிதாக இருக்கும்போது அதிலும் செவ்வாய் தோ­ம் உள்ளதாகக் கூறப்படும் பெண்ணின் நிலை என்னவாகும்?

    அப்படி தோ­முள்ள ஆண் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் அவனை மணம் முடித்துவிடலாமா? அப்படிப்பட்ட தோ­த்தில் உள்ளவர்கள் அனைவரும் தீயவர்களாக இருந்தால் அவர்களை மணமுடித்து விடுவார்களா?

    ஆனால், சிலர் அதற்கும் தயங்குவதில்லை. எப்படியோ திருமணம் முடிந்தால் சரி என்று எவனாவது குடிகாரன் தலையில் கட்டிவிடுவார்கள்.

    இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் பகுத்தறிவே நல்ல விடை தருகிறது.

    எதை நம்ப வேண்டும்?

    எதை உதறித் தள்ள வேண்டும்? எது பக்தி? எது அறியாமை? எது மூடத்தனம்? எது இறை வழிபாடு என்பது தெரிந்தால் வாழ்க்கையில் எந்தப் பிரச்சினையும் இல்லை.

                    வாழ்க வளமுடன்!

Thursday, June 26, 2008

மனிதனும் தெய்வமாகலாம்

மனிதனும் தெய்வமாகலாம்
மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்ற பழைய தத்துவப் பாடலை நீங்கள் முன்பே கேட்டிருந்தால் அது உங்கள் காதுகளில் இப்போது ஒலித்துக் கொண்டிருக்கும். பிறர் துயரங்களைக் கண்டு இரங்கும்போதும், பிரதிபலன் பார்க்காமல் உதவும்போதும் நாம் கடவுளாகிறோம். ஆபத்தில் சிக்கிக் கொண்டிருப்பவர்களை, உயிருக்குப் போராடியவர்களை மீட்கும்போது நம்மை அவர்கள் கடவுளாகப் பார்க்கிறார்கள். இந்த கடவுள் நிலையை அனைவரும் பெற வேண்டும் என்பதே என் ஆவல். அப்படி அனைவரும் அந்த நிலையை அடைந்துவிட்டால் உலகில் பிரச்சினை ஏது? போதாத குணம், பரந்த மனப்பான்மையின்மை, அறியாமை, வஞ்சகம் இவைதானே மனிதனை உயரவிடாமல் தடுக்கின்ற காரணிகள். வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற லட்சியத்தையும் தாண்டி நிற்கும் உன்னத லட்சியம் இப்படி கடவுள் என்று பெயரெடுப்பது. ஓர் இறைவன் கொள்கைக்கு முரணானது அல்ல. நம்மை மற்றவர்கள் வழிபட வேண்டும், துதி பாட வேண்டும், புகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுமாயின் அங்கே கடவுள் நிலை மாறி மனித நிலைக்கு வந்து விடுவோம். இதைத்தான் முன்பே சொன்னேன். எதிர்பார்க்காமல் செய்யும் உதவியே இறை தன்மை. செய்கின்ற உதவியை விளம்பரப்படுத்திக் கொண்டு அதை நாள்தோறும் பிறர் பாடச் செய்வது வேண்டியதில்லை. தெருத் தெருவாக ஏழைகளைச் சந்தித்து உதவ வேண்டும் என்றால் நமது தொழிலை எப்படி செய்வது. வாழ்வில் முன்னேறுவது எப்படி என்று கேட்பவர்களுக்கு ஒரு விசயம் நினைவுபடுத்த விரும்புகிறேன். எல்லோருக்கும் ஆபத்து தேதி சொல்லிவிட்டு வராது. அது போல துயரங்கள் எப்போது வருமென்று சொல்ல முடியாது. நம் கண்ணில் படுகின்றவர்கள் துயரப்படும்போது நம்மால் இயன்ற உதவிகள் செய்தால் போதும். நம்மிடம் எதுவுமில்லையயன்றாலும், இரக்கப்பட்டு அவர்கள் நன்றாக வாழ வேண்டும் என்று வாழ்த்திவிட்டாவது செல்லுங்கள். அது போதும். ஆனால், எப்போதும் வறிய நிலை தனக்குத்தான் சொந்தம் என்று திரிபவர்களுக்கு நான் எந்த உதவியும் செய்யக்கூடாது என்று அறிவுரை செய்வேன். அப்படி செய்கின்ற உதவி அவனை அவன்தன் நிலையை உயர்த்தச் செய்யுமா என்றால் செய்யுங்கள். எப்போதும் கஷ்டப்படுகிறவனுக்கு இலவசமாக டிவி வழங்கினால் அது சரியாகுமா? வயிறாற தினமும் அன்னதானம் வழங்கினால் நல்லதா? இப்படித்தான் அவனைச் சோம்பேறியாக்க வேண்டுமா? உடலில் உள்ள தெம்பை மனதில் கொண்டு வரச் செய்ய வேண்டும். நல்ல தொழிலைக் காண்பிக்க வேண்டும். பிறர் உழைப்பைத் திருடுகிறவனுக்கு ‡ பிறர் சொத்தில் சுகம் காண நினைப்பவனுக்கு எந்த உதவியும் பயனளிக்காது.

My New Book published




Sunday, March 09, 2008

important websites

www.vanmadhi.blogspot.com


Mail
www.mail.yahoo.com
www.rediffmail.com
www.gmail.com
www.mail.com

University
http://www.annauniv.edu/

Saturday, September 23, 2006

வெளிச்சம் தேடிப்போ

என் அருமை இçeஞனே...
உன் வாழ்வில்
சிந்திக்க ஆரம்பித்துவிட்டாயா?
சோதனைகçe சந்திக்கத் தயாரா?

யுகங்கள்தோறும்
எத்தனை எத்தனை
சாதனை முகங்கள்
அந்த வரிசையில்
நீயும் முகம் காட்டத் தயாரா?

லட்சிய விண்மீன்கள்
வரிசையில்
நீயும் அணிவகுக்க வேண்டாமா?

அதற்கு நீ
நிறைய செய்யவேண்டும்.
நிறைவாய்ச் செய்யவேண்டும்
புதியதாய்
பூமிப்பந்தை வேகமாக்கும்
வலிமையான கரங்களுடன்
நீ கeத்திற்கு தயாராகவேண்டும்.

என்ன யோசிக்கிறாய்?
எங்கு பார்க்கிறாய்?
யாருடைய உதவிக்காக
பின்னோக்கிப் பார்க்கிறாய்
எவரும் வேண்டாம்
யாருக்காகவும் காத்திருந்து
காலத்தை வீணாக்க வேண்டாம்

வாகனம் உன்னிடமே உள்eது
பயணம் செய்ய என்ன யோசனை?

உலகை வெல்லும் மந்திரம்
உன்னிடமே உள்eது
யாரை நினைத்து தவமேற்றுகிறாய்?

எதிரிகçe நினைத்து பயம் கொள்கிறாயா?
விரோதிகçeப் பயமுறுத்தும்
வித்தை உன்னிடம் இருப்பதை
மறந்துபோனாயோ?

பலத்தைக் கொண்டு
பலவீனத்தை சரி செய்

உலக மாற்றங்கçeக் கண்டு
உருகிப் போகாதே
பூமிப் பந்து சுழல்கிறதே...
நீயும் அதனுடன் சேர்ந்து சுற்று

எல்லோரும் ஓடுகிறார்கள்
எப்படி சாதிப்பது?
ஓடுகிறவர்கள் பின்னே
வெறித்தனமாய் ஓடு
மற்றவர்களின் கால்கçe
ஏன் வெறித்துப் பார்க்கிறாய்?
உன் வேகத்தோடு
மற்றவர்களின் வேகம்
ஒப்பிடும் வேலை உனக்கல்ல
நீ ஓடும் வேகத்தை விரைவாக்கு
ஆனால் விலகி ஓடாதே...

சூரியனைப்போல்
அனல் கக்கும் சக்தி
உனக்குள்¼e ஒடுங்கிக் கிடக்கிறது
காலம் வரட்டும்
வரும்போது பார்த்துக் கொள்eலாம்
காலத்திற்காக காத்திருக்க வேண்டாம்

கற்பனைக் காற்றை சுவாசிப்பவனா நீ
காற்றில் கரைந்துவிடாது
மிதந்துவரும் கலையை அறிந்து கொள்

எத்தனை முறை முயன்றாலும்
எழுவதற்கு முடியவில்லையா?
உட்கார்ந்து கொள்.
உறுதிமொழி எடுத்துக் கொள்
உலகை வெல்லத்தான் போகிறேன் என்று
உள்eத்திற்குள் உரக்கப் பேசு
நிச்சயம் எழுவாய்.
அதனால் வெல்வாய்.

நண்பர்கள்
உறவினர்கள்
பெரியவர்கள் சிறியவர்கள்
என்ன நினைக்கிறார்கள்
உன்னைப் பற்றி
கலகம் செய்பவர்கள் பற்றி
கலக்கம் ஏன் சகோதரனே
உயிராய் நினைப்பவர்கçe
உண்மையாய் இரு
விரோதம் செய்பவர்கçeக் கண்டால்
விலகியே நில்
விதியை விரட்டுவதைப் போல்
இவர்கçe விரட்ட வேண்டாம்.

உறவினர்கள் தொல்லை உண்டா
உதவியதற்கு
உபத்திரம் தருகிறார்களா?
தூக்கி எறி உதவிகçe
தாக்குப்பிடி உறவினர்கçe
சமயத்திற்கு
தேவைப்படுவார்கள் உறவினர்கள்
ஆனால்
சந்தர்ப்பவாதிகளின்
தேவை வேண்டாம்

பந்தபாசங்கள் வேண்டும்தான்
உன் தேவைக்கு
நிழலாய் வருபவர்கள் கொஞ்சம்பேர்தான்
உன்னை
நிழலாய் ஆக்கிக் கொள்பவர்கள்
எக்கச்சக்கம்
பெருமை கொள்
வாழ்வு கொடுத்தோம் என்று
கர்வம் கொள்

சின்னச் சின்ன
தருணங்களில் உதவி செய்
சின்னச் சின்ன
குழந்தைகள் கண்டால் அன்பு செய்

வாழ்க்கை முழுவதும்
வந்து போகிறவர்களிடம்
புன்னகை சிந்து

வறட்டுக் கௌரவம் வேண்டாம்
வீண் ஜம்பம் வேண்டாம்.

வசதிகள் பெருகினாலும்
உன் பண்புகள் மிளிரவேண்டும்.

நிலவைப் போல் உள்eம் கேள்
சூரியனின் சூடு கேள்
பூமியின் தாராeம் கேள்.
தென்றலைப் போல்
மெல்லிய தேகம் கேள்
சூறாவளியின் வேகம் கேள்
கடல் அலையின் முயற்சி கேள்
பறவைகளின் பாசம் கேள்

சிகரம் செல்லலாம் வாருங்கள்

தம்பி...
வெளிச்சம் தேடுகிறாயா?
இரவு முடிந்துவிடும்
கொஞ்சம் பொறு.
நாçe விடியல்
கொஞ்ச நேரம்தான்
காத்திரு...

நிமிட முட்கள்
விரட்டிப் பிடிக்கிறது
காலமும்
உருண்டோடிப் போய்விடுகிறது.

நீ புறப்பட ஆரம்பித்தால்
நின்றுவிடக் கூடாது.

தாகம் ஏற்படும்
தயங்கிவிடக்கூடாது

கçeப்பு தோன்றும்
மயங்கிவிடக்கூடாது

உனது எண்ணம்
வெற்றியை நோக்கி மட்டுமே

உனது கால்கள் பயணத்தின்
எல்லையைத் தொடுவதற்கே...

வெற்றிக் கனியைப் பறிப்பதற்கு
கைகள் தயாராகிவிட்டதா?

புறப்படு.
கொஞ்சம் தூரம்தான்

புகைவண்டிச் சத்தம்
உன்னை திசை திருப்புகிறதா?

காதுகçeப் பொத்திக் கொள்

வெற்றிக்குத் தேவையான
சேதிகள் காற்றில் கிடைக்கிறதா?
உன் காதுகளில் போட்டுக்கொள்

சோகம் பரப்பும்
இசைக் குயில்கள் வேண்டாம்

உணர்ச்சியைக் கிeப்பி
ஊமைக்காயம்
உண்டுபண்ணும்
வேடிக்கை கானம் வேண்டாம்

நிஜத்தைச் சொல்லும்
நிம்மதி ராகம் போதும்

பாலைவனம் கடந்தாகிவிட்டதா?
பால்மனம் சூடாகிவிட்டதா?

உள்eம் கொதிக்கிறதா?
நல்லது
பக்குவப்படட்டும் மனம்
சூடாகி வெந்து குளிர்ந்து
ஒரு நிலைக்கு வரட்டும்

அடிபட்டு மிதிபட்டு
அல்லல்பட்டு உருவாகிறது
அழகிய சிற்பம்
அப்படித்தான் நீயும்
அல்லலுக்குப் பிறகுதான்
அமைதி கிடைக்கும்.
பொறுத்திரு.
கிடைக்கும் வரை
ஓடிக்கொண்டிரு.

விரல்களுக்கும் வேலை கொடு

மனிதா,
எதிர்கால எல்லை
நீண்டுவிட்டது.
எட்டிப் பிடிப்பதற்குள்
எங்கோ சென்றுவிடும் வேகம்
விரட்டிப் பிடித்தால்
விலகி ஓடும் நிலை
எப்படி தொடுவாய்
வெற்றி வானை?

நீ
சோம்பலாய்த் திரிந்தால்
சோர்வுதான் கிடைக்கும்
சோகம்தான் அரவணைக்கும்

விரல்களால்
சுட்டிக் காட்டி
குறை சொல்வது
வாழ்க்கைக்கு உதவுமா?
சுட்டிக் காட்டும்
விரல்களுக்கும்
வேலை கொடு ‡ நீ
விண்வெளியைக்கூட
தொட்டுவிடலாம்.

நிஜம்
உன் கண்களில் தெரிந்தால்
உண்மை
உன் உதடுகள் உச்சரித்தால்
உழைப்பு
உன் கரங்களில் இருந்தால்.
வெற்றி
உன்னுடனே இருக்கிறது.

நாçeய
வெற்றி தேசத்தைக்
கண்டுபிடிக்க
இன்று
நீ ஓடியாடி
உழைத்துத்தான் ஆகவேண்டும்.
என்றுமே
இன்பம் கொள்e
இன்று மட்டும்
நீ வேதனை
கொள்eத்தான் வேண்டும்.

அடிமையாய்
வாழ்ந்தது போதும்
அமைதியாய்த்
திரிந்தது போதும்

சிறைகçe உடைத்தெறி
சிந்திக்க ஆரம்பி
உறவுகçeப் பலப்படுத்து
உலகினை வென்றிடு

வானமே எல்லை

பரந்து விரிந்து கிடக்கும் வானத்தைத் தொட்டவர் யாராவது உள்eனரா?
எவ்வeவு தூரம் உயரப் போனாலும், போய்க் கொண்டே இருக்கிறது. அதற்கு மேலேயும் சென்று கொண்டிருந்தால் பிரபஞ்சம் ‡ விண்வெளி ‡ சுத்த வெளி என்று வெறுமை மட்டுமே தோன்றும்.
போய்க் கொண்டேயிருக்கும் எல்லையற்ற நிலையைக் குறிப்பிடத்தான் வானமே எல்லை என்கிறோம்.
சுவாசிப்பதற்கு அeவு வைத்திருக்கிறோமா?
இவ்வeவு நாட்கள்தான் உண்ண வேண்டும் என்று வரையறை வைத்துக் கொள்கிறோமா? இல்லையே, கிடைக்கிற அயிட்டங்கçe அப்படியே விழுங்கும் சாப்பாட்டு ராமன்கள் இருக்கின்றனர்தானே?
ஆனால், வாழ்க்கையில் சாதனைக்கும் மட்டும் ஒரு அeவுகோல் வைத்திருக்கிறோம். ஏன்?
இன்னும் சில பேர், வாழ்க்கையை ஒரு பொருட்டாகவே எண்ணுவதில்லை.
கடமைக்காக வாழ்பவர்களும், பழம் பஞ்சாங்கத்தைத் தூக்கி குப்பையில் போடாமல் இன்னும் அக்குள் பகுதியில் வைத்துக் கொண்டு திரிபவர்களும் இருக்கிறார்கள்.
விதியை விட்டு வீதிக்கு வாருங்கள். குடிசை வீடு, மாடி வீடு, தாரிசு வீடு என்றில்லாமல், இன்னும் அதற்கு மேலே என உங்கள் கற்பனையை விரியுங்கள்.
ஆழமாகச் சுவாசியுங்கள். மிதமாக, கொஞ்சம் வேகமாகச் சுவாசியுங்கள். உங்கள் கற்பனைக்குக் கொஞ்சம் வடிவம் கொடுங்கள்.
பஞ்சாயத்துத் தேர்தலில் வென்றவன், அடுத்த தேர்தலில் சட்டமன்ற உறுப்பினருக்கு நிற்கிறான். இன்னும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் முதலமைச்சராகி விடுகிறான். இது போலே, வரைமுறை வைத்துக் கொள்ளாமல் மேலும், மேலும் முயன்று கொண்டேயிருங்கள்.
சின்னச் சின்ன சந்தோ­ங்களில் மனநிறைவு கண்டுவிட்டால், சோம்பேறித்தனம்தான் உங்கçe ஆரத்தி எடுத்து உட்கார வைத்துவிடும்.
வாழ்க்கையை ஒரு அண்டாவிற்குள் போட்டு மூடிவிடாதீர்கள். அவற்றை குeத்திற்குள் போடுங்கள். அல்லது ஆற்றிற்குள் எறிந்துவிடுங்கள். அது செல்லுமிடமெல்லாம் வரலாற்றை உண்டுபண்ண வேண்டும்.
நாம் ஜெயிக்கப் பிறந்தவர்கள் என அடிக்கடி மார் தட்டிக் கொள்ளுங்கள். அப்போதுதான் உற்சாகம் பீறிட்டெழும். அந்த வேகத்தில் ஆயிரம் வேலைகள் செய்து முடிக்கலாம்.
எட்டாம் வகுப்பு படிக்கும்போதே கலெக்டராக வேண்டும் என்று குறிக்கோள் வைத்துக் கொள்ளுங்கள். அதற்காக எவ்வeவோ தயார் செய்ய வேண்டியிருக்கும். அவற்றை 8ம் வகுப்பிலிருந்து தொடங்கினால் கல்லூரி வாசலை விட்டு வெளியேறும்போதே கலெக்டராக உருவாகிவிடலாம்.
இeவயதிலே சின்னஞ்சிறு பணிகளிலே உட்கார்ந்து நிம்மதியாக வாழவேண்டும். இதற்கு பள்ளிக்கூட வாழ்க்கையே போதும் என எண்ணிவிட வேண்டாம்.
சாதிப்பதற்கு படிப்பு தேவையில்லை என்று நினைத்தாலும் பரவாயில்லை. கடுமையாக ‡ காட்டுத்தனமாக உழைக்கத் தயாராகுங்கள். உங்கள் மனம் ஆயிரங்களில் நின்றுவிடாமல் லட்சங்களில், கோடிகளில் இருக்கட்டும். அதற்காக தூக்கத்தை மறக்கலாம். ஆனால் வியாதியை விலைக்கு வாங்காதீர்கள்.